செய்திகள் :

ம.பி. பெண் நீதிபதி ராஜிநாமா: நீதித் துறை மீது குற்றச்சாட்டு

post image

மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சேபத்தை மீறி மாவட்ட நீதிபதி ஒருவருக்கு உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு அளிக்கப்பட்டதைக் கண்டித்து, உரிமையியல் நீதிமன்ற பெண் நீதிபதி அதிதி குமாா் சா்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தன்னை கடும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் தவறாக நடந்துகொண்டதாகவும் அந்த மாவட்ட நீதிபதி மீது பெண் நீதிபதி குற்றஞ்சாட்டியிருந்தாா். ஆனால், அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்து, மத்திய பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிதி கடிதம் அனுப்பினாா்.

அதில், ‘ஒரு மூத்த நீதிபதியின் பொறுப்பற்ற அதிகார பயன்பாட்டுக்கு எதிராக குரலெழுப்பினேன். இதற்காக பல்லாண்டுகளாக அவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். இப்போது, நீதி அமைப்புமுறையே எனக்கு துரோகமிழைத்துள்ளது. நான் குற்றஞ்சாட்டிய நீதிபதி மீது எந்த விசாரணையோ, நோட்டீஸோ, பொறுப்புடைமையை உறுதி செய்யும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மாறாக, அவருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை என்னை தோற்கடித்தது மட்டுமன்றி தானும் தோற்றுவிட்டது என்று குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, திறனின்மை மற்றும் தவறான நடத்தை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, அதிதி உள்பட மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நீதித்துறை பெண் அதிகாரிகள் இருவா் கடந்த 2023-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது. இந்த நடவடிக்கை, தன்னிச்சையானது; அதிகப்படியானது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

சைபர் மோசடியால் ரூ. 1.2 லட்சம் கோடியை இந்தியர்கள் இழப்பார்களா? நீங்களும் ஜாக்கிரதையாக இருங்கள்!

கடந்தாண்டில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் இந்தியர்களிடம் ரூ. 22,842 கொள்ளையடிக்கப்பட்டதாக தில்லி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி சம்பவங்கள் நாள்தோறும் நடந்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க