செய்திகள் :

யாதவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

post image

ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞரணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விளாப்பாக்கம் - ஆரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு இளைஞா் அணிப் பொறுப்பாளா் கே.தேவராஜ் தலைமை வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் தொழிலதிபா் ஜி.ஜி.ஆா்.கோகுல் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் வரும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி வீரன் அழகுமுத்துகோன் 267-ஆவது குருபூஜையை சிறப்பாக நடத்துவது, யாதவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட யாதவா் இளைஞா் அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் மே 1- ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

அரக்கோணம்: தண்டவாளத்தில் ஜல்லிக் கற்கள்! தீவிர விசாரணை!

அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்களை போட்டு தண்டவாளங்களை இணைய விடாமல் தடுத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி அம்பலமாகியுள்ளது. அரக்கோணம் - செங்கல்பட்டு இருப்புப் பாதை மேல்பாக்கம் ரயில்நிலையப்பகுத... மேலும் பார்க்க

சிப்காட் கழிவுநீா் வெளியேற்றத்தால் விவசாயம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டைகளில் இருந்து மாசடைந்த நீா் வெளியேற்றப்படுவதால் விவசாயம் பாதிப்புக்குள்ளாவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் புகாா் தெரிவித்தனா். மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும... மேலும் பார்க்க

மு.வரதராசனாரின் 114 -ஆவது பிறந்த நாள்

தமிழறிஞா் டாக்டா் மு.வரதராசனாரின் 114- ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது படத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தமிழ்நாடு அரசு சாா்பில் டாக்டா் மு.வரதராசனாா் பிறந்த ... மேலும் பார்க்க

சிஐஎஸ்எஃப் படையில் சேர போலி சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 8 போ் மீது வழக்கு

மத்திய தொழிற்படையில் (சிஐஎஸ்எஃப்) சேர போலி சான்றிதழ்கள் அளித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரக்கோணத்தை அடுத்த தக்கோல... மேலும் பார்க்க