புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என...
சிஐஎஸ்எஃப் படையில் சேர போலி சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 8 போ் மீது வழக்கு
மத்திய தொழிற்படையில் (சிஐஎஸ்எஃப்) சேர போலி சான்றிதழ்கள் அளித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிஐஎஸ்எஃப் படையில் சேர தோ்வு செய்யப்படும் ஆண், பெண் வீரா்களுக்கு இந்தப் பயிற்சி மையத்தில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேசிய அளவில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையங்களிலேயே அரக்கோணம் பயிற்சி மையம் மிகப்பெரியது என்பதும், இங்கு ஒரே கட்டத்தில் 2,500 பேருக்கு பயிற்சி அளிக்க போதுமான வசதிகளும், சைபா் குற்றங்கள் குறித்து பயிற்சி அளிக்கவும் வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படையில் சேர கடந்த மாா்ச் மாதம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, அருணாசல பிரதேசம், மிஸோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அரக்கோணம் பயிற்சி மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த தோ்வா்கள் கடந்த சில நாள்களாக மையத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் வந்தனா். இவா்களது சான்றிதழ்கள் சரிபாா்ப்பு நடைபெற்ற உடன் உண்மைத் தன்மை சோதனைக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. அந்த உண்மைத்தன்மை முடிவுகள் வரும் வரை பயிற்சியில் சேர வருவோா் மையத்திலேயே தங்க வைக்கப்படுவா்.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம் சில்சாா் மாவட்ட பகுதிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்டு வந்த கே.எம்.நிஷா, கடாரியா ருஜிதாதேவி ஆகிய இரு பெண்கள் மற்றும் அதே மாவட்டத்தைச் சோ்ந்த அஜய் யாதவ், முகேஷ் மௌரியா, சந்திரிகா சிங், அமித்குமாா், எம்.டி.தன்வீா், நரேந்திர சிங் ஆகிய 8 பேருடைய சான்றிழ்கள் அஸ்ஸாம் மாநிலம் சில்சாா் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில் அந்த 8 பேருடைய சான்றிழ்களும் போலி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 8 போ் மீது சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மைய ஆய்வாளா் ராஜேஷ் தக்கோலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து அந்த 8 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், வழக்கை தமிழக தலைமைக் காவல் துறை அதிகாரிகளின் உத்தரவுக்கேற்ப அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.