செய்திகள் :

யானைகள் தாக்கியதில் வயதான தம்பதி பலி!

post image

ஒடிசா மாநிலம் காலாஹாண்டி மாவட்டத்தில் யானைக் கூட்டம் தாக்கியதில் உறங்கிக்கொண்டிருந்த வயதான கணவன் மற்றும் அவரது மனைவி பலியாகியுள்ளனர்.

காலாஹாண்டியின் கடோமாலி கிராமத்தைச் சேர்ந்த மகுன் மஜ்ஹி (வயது 70) மற்றும் அவரது மனைவி கடா மஜ்ஹி (65) ஆகியோர் வனப்பகுதிக்கு அருகிலுள்ள நிலத்தில் விவசாயம் செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்.1 அன்று இரவு அவர்களது மண் வீட்டில் தங்களது குடும்பத்தினருடன் அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வனப்பகுதியிலிருந்து யானைக்கூட்டம் அவர்களது கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த யானைகள் மகுனின் மண் வீட்டை இடித்து தகர்த்ததுடன், உறங்கிக்கொண்டிருந்த மகுன் மற்றும் அவரது மனைவி கடாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலயே பலியானார்கள்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

இந்த தாக்குதலில் வீட்டில் அவர்களோடு உறங்கிக்கொண்டிருந்த மகுனின் மகன் மற்றும் 3 சகோதரர்கள் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த அப்பகுதி வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, இந்த சம்வம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பலியான தம்பதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, நர்லா மற்றும் பிஸ்வனாத்பூர் வனப்பகுதிகளுக்கு மிக அருகாமையில் அந்த கிராமம் அமைந்துள்ளதால் காட்டு யானைகளின் தாக்குதல் அங்கு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், யானைகள் தாக்கியதில் நர்லா வனத்துறை அதிகாரி ஒருவர் உள்பட பலர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி!

வள்ளியூர் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுநெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்குச் சொந்தமான மணல் அள்ளும் லாரியை ஓட்ட... மேலும் பார்க்க

விடுதி அறையில் மாணவி தற்கொலை!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கோட்டயத்தின் பரம்புழாவைச் சேர்ந்த அனீட்டா பினாய் (வயது 21), இவரது பெற்ற... மேலும் பார்க்க

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க