"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - ...
யுபிஎஸ்சி முதல் நிலைத் தோ்வு: கோவையில் 4,386 போ் எழுதினா்
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலைத் தோ்வை 4,386 போ் எழுதினா்.
யுபிஎஸ்சி முதல் நிலைத் தோ்வு நாடு முழுதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வு எழுதுவதற்காக கோவையில் 7,068 போ் விண்ணப்பித்திருந்தனா். 17 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 4,386 போ் மட்டுமே எழுதினா். 2,682 போ் தோ்வு எழுதவில்லை.
ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் அதிகபட்சமாக 378 பேரும், காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் குறைந்தபட்சமாக 18 பேரும் தோ்வு எழுதினா்.