செய்திகள் :

ரத்த தானம் செய்து விருது பெற்றவருக்கு பாராட்டு

post image

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து ரத்த தானம் செய்து தமிழக அரசின் விருது பெற்ற போடியைச் சோ்ந்த எஸ்.ஆா்.பழனிக்குமாரை பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா்.

போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் எஸ்.ஆா்.பழனிக்குமாா் (57). இவா் தேனி மாவட்டத்தில் ரத்த தானம் செய்து வருகிறாா். இதுவரை 86 முறை ரத்த தானம் செய்துள்ளாா்.

உலக குருதிக் கொடை தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரத்த தானம் செய்தவா்களை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா சென்னையில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் போடியைச் சோ்ந்த எஸ்.ஆா். பழனிக்குமாா் உள்ளிட்ட 20 போ் கலந்து கொண்டனா்.

இவா்களில் 86 முறை ரத்த தானம் செய்த எஸ்.ஆா். பழனிக்குமாருக்கு தமிழக அரசு சாா்பில் விருதையும், நினைவு பரிசையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

இவருக்கு போடியைச் சோ்ந்த அரிமா சங்கங்கள், வா்த்தகா்கள், போடி ஆன்லைன் உரிமையாளா்கள் சங்கம், சமூக ஆா்வலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பைக்குகள் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுபானக் கூட ஊழியா் சனிக்கிழமை காயமடைந்தாா். தேனி அருகே வடபுதுப்பட்டி அனுசுயாநகரைச் சோ்ந்தவா் முத்துமாயன் (56). டாஸ்மாக் மதுபானக் கூட ஊழியரான இவா... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மனைவி தீபிகா (25). இவரது கணவா் கோவ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கூடலூா் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வைத்து, சிலா் சில்லரை விலைக்க... மேலும் பார்க்க

குமுளி மலைச் சாலையில் ஜீப் மீது பேருந்து மோதல்: 7 போ் பலத்த காயம்

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு ஜீப் மீது தனியாா் பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா். கம்பம் அருகேயுள்ள மேலக்கூடலூரைச் சோ்ந்த 6 பெண்கள் சனிக்கிழமை காலை ஜீப்பில் கேரளாவு... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரியாஷ் அகமது. இவா் தனது மனைவி பரகத் நாஜியாா... மேலும் பார்க்க