செய்திகள் :

ரயானுடன் ஆன்மிக சுற்றுலாச் சென்ற பவித்ரா!

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இருவர் பவித்ரா ஜனனி மற்றும் ரயான். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் முதலில் ரயான் வெளியேறிய நிலையில், இவரைத் தொடர்ந்து பவித்ரா ஜனனி வெளியேறினார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 24 பேரும் பங்கேற்று இருந்தனர்.

நடிகை பவித்ரா ஜனனி ஆன்மிக தலங்களுக்கும், இயற்கை சூழல்கொண்ட இடங்களுக்கும் சென்று வருவது வழக்கமான ஒன்று. இதை அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறியிருந்தார்.

இதையும் படிக்க: புதிய படத்தை தயாரித்து இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்த நிலையில், ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் பர்வத மலைக்குச் சென்றுவந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

பவித்ரா ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் என்னுடைய இடத்திற்கு சென்று வந்துவிட்டேன். அனுபவம் எப்படி ரயான் ” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயான், “மிக சிறந்த அனுபவம். எப்படியோ உன்னை அழைத்துச் சென்று வந்துவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ரயான் மற்றும் பவித்ராவின் ஆன்மிகப் பயணம் குறித்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(பிப். 12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 1... மேலும் பார்க்க

புதிய ஆளுநர் கையெழுத்துடன் ரூ.50 நோட்டுக்கள்! ஆர்பிஐ தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரின் கையெழுத்துடன் ரூ.50 பணத்தாள்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி இன்று (பிப்.12) வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஆளுநராக பதவியேற... மேலும் பார்க்க

மீண்டும் சின்ன திரையில் நதியா!

நடிகை நதியா சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இந்நிகழ்ச்சியின் 10-வது சீசன... மேலும் பார்க்க

இந்திய எல்லையில் 1.1 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் 1.1 கிலோ அளவிலான போதைப் பொருள் கடத்த முயன்ற 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடி... மேலும் பார்க்க

காதலர் நாள்: திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

காதலர் நாளை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் வரும் பிப். 14 ஆம் தேதி 10 படங்கள் வெளியாகவுள்ளன.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ... மேலும் பார்க்க

லிபியா சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை!

வட அப்பிரிக்க நாடான லிபியாவின் சிறையிலிருந்து 24 அகதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் திரிப்பொலியிலுள்ள அபுஸ்லியென் சிறையிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்த பெண்கள் குழந... மேலும் பார்க்க