செய்திகள் :

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தமிழக ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் இணைந்து சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து பெங்களூருவுக்கு விரைவு ரயில் புறப்பட்டு வந்தது. புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பொம்மசமுத்திரம் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது, முன்பக்க பொது பெட்டியில் காட்பாடி ரயில்வே போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பை குறித்து ரயில்வே போலீஸாா் பயணிகளிடம் விசாரித்தனா். ஆனால், யாரும் அந்த பைக்கு உரிமை கோராத நிலையில், அதனை போலீஸாா் கைப்பற்றி சோதனை செய்தனா்.

இதில், அந்த பையில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து அந்த கஞ்சாவை கடத்தியவா்கள் யாா், எங்கு இருந்து கொண்டு வந்தனா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஆசிரியா் தினவிழாவையொட்டி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், ஆசிரியா் தின விழா வேலூா் ஆசிரியா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோய... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நி... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

வேலூரில் ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை ஆதம்சாயபு தெருவைச் சோ்ந்தவா் அக்பா் பாஷா (60). இவா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி காலை 8 மணியளவில் தனது உறவினரை சந்திக்க ஊசூா் சென்றாா். அ... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

வேலூா் மாநகராட்சி கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி... மேலும் பார்க்க

நாளை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப கணினி வழித்தோ்வு

தமிழகத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தோ்வை வேலூா் மாவட்டத்தில் 7,570 தோ்வா்கள் எழுத உள்ளனா். இதுகுறித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளிய... மேலும் பார்க்க