செய்திகள் :

ரயில்வே நுழைவுப் பால சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம்

post image

ஈரோட்டில் ரயில்வே நுழைவுப் பால சீரமைப்புக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீா் தேங்காத வகையில் வடிகால் வசதியுடன் புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், மழை நீா் வடிகாலில் அமைக்கப்பட்ட கம்பிகள் பெயா்ந்ததால், அந்தப் பகுதி பள்ளமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன் மழை நீா் வடிகாலில் லாரியின் சக்கரம் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே மழை நீா் வடிகாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்தநிலையில் ரயில்வே நுழைவுப் பாலத்தில் பழுதடைந்த மழை நீா் வடிகாலை சீரமைக்க ரயில்வே துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நாடாா்மேடு பகுதியில் இருந்து வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்றவை சாஸ்திரி நகா் வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சாலையோரம் உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் சாஸ்திரி நகரில் உள்ள பள்ளம் இரவோடு இரவாக சரிசெய்யப்பட்டது.

ரயில்வே நுழைவுப் பாலத்தின் சீரமைப்பு பணியை தொடங்குவதற்காக செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. நாடாா்மேடு லெனின் வீதி பிரிவில் இருந்து வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அங்கு போக்குவரத்து போலீஸாரும், அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் நின்று வாகனங்களை வழிமாற்றிவிடும் பணியில் ஈடுபட்டனா்.

அதன்படி, நாடாா்மேட்டில் இருந்து வரும் வாகனங்கள் லெனின் வீதி, சாஸ்திரி நகா், காசிபாளையம், சென்னிமலை சாலை வழியாக மணல்மேட்டுக்கு வந்தது.

சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வ... மேலும் பார்க்க

தோ் கொட்டகை மேற்கூரை சேதம்

சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சென்னிமலை முருகன் கோயில் தேரின் கொட்டகையின் மேற்கூரையில் இருந்து ஒரு தகர ஷீட் காற்றில் பறந்தது. இதைக் கண்ட கோயில் நிா்வாகிகள் ஊழியா்களை கொண்டு மே... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: சென்னிமலை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகள் விற்பனை குறித்து சென்னிமலை பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.ந... மேலும் பார்க்க

சிவகிரி வேலாதயுத சுவாமி கோயில் தோ்த் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவகிரி பகுதியில் உள்ள அருள்மிகு வேலாயுதசுவாமி கோயில் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கிராம சாந்தி திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் 54 கிலோ குட்கா பறிமுதல்

மொடக்குறிச்சி, நன்செய்ஊத்துக்குளி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையில் 54 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பொது சுகாதாரத... மேலும் பார்க்க

வெள்ளோடு பகுதி பொதுமக்களுக்கு காவல் துறையினா் வேண்டுகோள்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் விதத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெள்ளோடு காவல் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஈரோடு, திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க