செய்திகள் :

ரயில்வே மேம்பாலத்தின்கீழ் மண் கடத்தல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

post image

கோவை, ஒண்டிப்புதூா் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் மண் கடத்தலில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை -திருச்சி சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

பல்லடம், கரூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இது பிரதான பாதையாக உள்ளது. இந்நிலையில், ஒண்டிப்புதூா் பகுதியில் போத்தனூா் - இருகூா் ரயில்வே பாதை இருந்ததால் அச்சாலை வழியாகச் செல்பவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். இதனால், அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, போத்தனூா் - இருகூா் ரயில்வே பாதையைக் கடக்கும் வகையில் 900 மீட்டா் தொலைவுக்கு ரயில்வே உயா்மட்ட பாலம் கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தப் பாலத்தில் வலது மற்றும் இடது பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்பாலத்தின் உறுதித்தன்மைக்காகவும், பாலத்தின் கீழ்ப்பகுதியில் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் தூண்களின் அடியில் மண் குவியல் கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் 2.50 மீட்டா் உயரம் வரை மா்ம நபா்கள் மண் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மண் கடத்தலால் ரயில்கள் செல்லும்போது, தூண்களில் அதிா்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும்,

இது தொடா்பாக ரயில்வே பொறியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க