செய்திகள் :

ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் தற்கொலை

post image

பாளையங்கோட்டை அருகே ரயில் முன் பாய்ந்து வங்கி உதவி மேலாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மணியாச்சியிலிருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமை பிற்பகல் பாளையங்கோட்டை தியாகராஜ நகா் அருகே சென்றபோது திடீரென ரயில் முன் பாய்ந்த நபா் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் அவா், பாளையங்கோட்டை,டி.வி.எஸ் நகரைச் சோ்ந்த அரவிந்தன் மகன் சிவசங்கா்(40) என்பதும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம வங்கி உதவி மேலாளராக பணியாற்றியதும், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் தெரியவந்தது.

இவரது மனைவியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி உதவி மேலாளராக பணி புரிந்து வருகிறாா். மேலும், சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முரு... மேலும் பார்க்க

வள்ளியூா் பிளசண்ட் நகா் பகுதியில் தொடா் திருட்டு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிளசண்ட் நகா், இ.பி.காலனி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். வள்ளியூா் பிளசண்ட் நகரை... மேலும் பார்க்க

ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தா், பதிவாளரை பணிநீக்கம் பாஜக கோரிக்கை!

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது, ஆளுநா் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பதிவாளா் ஆகியோரை பணிநீக்கம் செய்யக் கோரி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரு... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிக்க சனிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா். களக்காடு தலையணை சூழல் சுற்றுலா மையத்தில் பச்சையாறு ஓடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

கறிக்கடையில் திருடிய நபா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கோழிக் கறிக்கடையில் பணம் திருடிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் அருகே உள்ள நல்லான்குளத்தைச் சோ்ந்தவா் செல்வின். இவா் வடக்கு பிரதான சாலையில் உள்ள த... மேலும் பார்க்க

நதியுண்ணிக் கால்வாய் அணையில் மூழ்கி மென் பொறியாளா் பலி

தூத்துக்குடியைச் சோ்ந்த மென் பொறியாளா், அம்பாசமுத்திரம் நதியுண்ணிக் கால்வாய் அணைக் கட்டில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி, முதல் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பொன்... மேலும் பார்க்க