செய்திகள் :

ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

post image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (72) உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்காக ரஷிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவர் ஏதேனும் ஓரிடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விடும் என்கின்றனர்.

இந்த நிலையில், புதின் பாதுகாப்பு கான்வாயில் இடம்பெற்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. ரஷியாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த ஆரஸ் லிமோசின் கார், மாஸ்கோ சாலையில் ரஷிய உளவுத்துறை தலைமையகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது, வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தின்போது, காரில் அதிபர் புதின் பயணிக்கவில்லை என்பதால், நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினார். இருப்பினும், இந்த விபத்து குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கார் என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு, பின்னர் உள்புறமும் பரவியதாகக் கூறுகின்றனர்.

அதிபர் புதினுக்கு மிகவும் பிடித்த காராக இருந்த லிமோசின் கார், சுமார் ரூ. 3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இந்த வகை கார்களைத்தான் புதின் பரிசாக அளித்தார்.

ரஷிய அதிபர் புதின் உயிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியும், அணுசக்தி எதிர்வினையைத் தூண்டும் என்று ரஷிய அதிபர் மாளிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனிடையே, உடல்நலக் குறைவால் புதின் விரைவில் இறந்து விடுவார். அதன்பின்னர், அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.

இதையும் படிக்க:ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவிகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க