செய்திகள் :

``ரஷ்யா, சீனாவுக்கு எப்போது அமெரிக்கா வரி விதிக்கும்?'' - ட்ரம்ப் அதிரடி பதிவு

post image

ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதற்கேற்றாற்போல், ரஷ்யாவிற்கு கெடுபிடி கொடுக்க, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் பிரேசில் மீது கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறார்.

ஆனால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு நாடான சீனா மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை ட்ரம்ப். காரணம், அமெரிக்கா, சீனா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை.

ட்ரம்ப்
ட்ரம்ப்
இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் சீனா மீது வரி விதிப்பது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டொனால்டு ஜெ. ட்ரம்பால் நேட்டோ நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்:

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதும், ரஷ்யா மீது பெரும் பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டு, அவர்களும் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போதும், நானும் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராக இருக்கிறேன்.

ஆனால், இன்னும் சில நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டிருக்கின்றன.

இது அதிர்ச்சியாக இருக்கிறது. இது பேச்சுவார்த்தையைப் பெரிதும் மட்டுப்படுத்துகிறது.

நான் கூறியதை நீங்கள் செய்யும்போது, எப்படியும் நான் ரஷ்யா மீது தடை விதிக்க தயாராக இருக்கிறேன். அது எப்போது என்பதை மட்டும் சொல்லுங்கள்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீனா மீது வரி

இத்தோடு நேட்டோ ஒரு குழுவாக சீனா மீது 50 - 100 சதவிகித வரியை விதிக்க வேண்டும். இந்த வரிகளை ரஷ்யா - உக்ரைன் போர் முடிந்தவுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இந்த வரி அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பெரிதும் உதவும். சீனா ரஷ்யா மீது வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

ஆக, இந்த வரிகள் அந்தக் கட்டுப்பாட்டைத் தளரச் செய்யும். இது ஒன்று ட்ரம்ப் போர் கிடையாது. (நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போரே தொடங்கியிருக்காது. இது பைடன் மற்றும் ஜெலன்ஸ்கியின் போர்).

இத்தனை உயிர்கள்...

இந்தப் போரை நிறுத்த உதவ மட்டுமே நான் இங்கு இருக்கிறேன்... எனக்கு ஆயிரமாயிரம் ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்களின் உயிர்களை நான் காப்பாற்ற வேண்டும். (கடந்த வாரம், 7,118 பேர் உயிரிழந்திருக்கின்றனர்).

நான் கூறுவதைப் போல, நேட்டோ கூறினால், இந்தப் போர் விரைவில் முடிவடையும். உயிர்களும் காப்பாற்றப்படும்.

அப்படி செய்யவில்லை என்றால், என்னுடைய நேரம், ஆற்றல் மற்றும் அமெரிக்காவின் பணத்தை நீங்கள் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்". என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

UK: லண்டன் வீதிகளில் திரண்ட மக்கள், போராட்டத்தில் வன்முறை; எலான் மஸ்க் பேசியது என்ன?

தற்போது லண்டன் வீதிகளில் போராட்டம் தொடங்கி இருக்கிறது.என்ன போராட்டம்? நேற்று, 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் லண்டனில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். இந்... மேலும் பார்க்க

``நூறு, பீரு, சோறு கொடுத்தால் அவர்கள் பின்னால் ஏன் செல்கிறீர்கள்?'' - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழகம் முழுவதும், "உள்ளம் தேடி, இல்லம் நாடி" என்ற பிரசாரத்தை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசாரத்தை மேற்கொண்டார்.... மேலும் பார்க்க

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தாரா நவாஸ் கனி எம்பி? - சிபிஐ விசாரிக்க வழக்கு

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உய... மேலும் பார்க்க

``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவசாயிகள் எதிர்ப்பு

கோவை சுகுணாபுரம் – நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிலேயே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் கோவை – சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை... மேலும் பார்க்க

CPI: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் பொறுப்பு வகித்... மேலும் பார்க்க

``சொன்னதெல்லாம் செஞ்சீங்களா சார்?'' - திமுக தேர்தல் வாக்குறுதியை லிஸ்ட் போட்டு கேள்வி கேட்ட விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரம்திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் இன்று விஜய் தனது முதல்பிரசாரபயணத்தைத் தொடங்கினார். அதற்கு, மாநகர காவல்துறை 23 கட்டுப்பாடுகளுடன் கூடிய நிபந்தனைகளை விதித்திருந்தத... மேலும் பார்க்க