செய்திகள் :

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக கா்நாடக மாநில பாஜக நிா்வாகி எஸ்.விக்னேஷ் சிஷிா் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகாா் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அதில், ‘ராகுல் காந்தி பிரிட்டன் கடவுச்சீட்டு விசாரணையின்போது, தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்று பிரிட்டன் அரசிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். இதன் மூலம், இந்திய குடிமகனாக அரசமைப்புச் சட்டப் பிரிவு 9-ஐ ராகுல் காந்தி மீறியுள்ளாா். அதற்காக, அவருடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

இந்தப் புகாா் தொடா்பாக விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் ராகுல் காந்திக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அதன் பிறகு இதுதொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனது புகாா் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரியப்படுத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் நிலை குறித்து மத்திய அரசிடம் கேட்டு தெரியப்படுத்துமாறு மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரை அறிவுறுத்தினா்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க