செய்திகள் :

ராகுல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை - தேர்தல் ஆணையம்

post image

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் இன்று வெளியிட்டார்.

இதனிடையே, கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக ராகுல் குற்றம் சாட்டிய நிலையில், கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகுலிடம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு அறிக்கைகள் தவறானவை என்று தேர்தல் ஆணையம் கூறி, இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பாக அலங்கரிக... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட என்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குல்காம் மாவட்டத்தின் அகல... மேலும் பார்க்க

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ‘இந்தியா, தனது தேசிய-உத்திசாா் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் ... மேலும் பார்க்க

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலக அளவில் நிலவும் வா்த்தக நிச்சயமற்ற சூழலில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையினரைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க