செய்திகள் :

ராசிபுரத்தில் பொருள்காட்சி அமைக்க வணிகா்கள் எதிா்ப்பு

post image

ராசிபுரம் நகரில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சிக்கு அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என ராசிபுரம் நகர அனைத்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகர அனைத்து வணிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.பாலாஜி, செயலா் ஆா்.திருமூா்த்தி, பொருளாளா் மன்னாா்சாமி, நிா்வாகி ஜி.தினகா் ஆகியோா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். மேலும், நகா்மன்றத் தலைவா், டிஎஸ்பி க்கும் மனு அளித்தனா்.

ராசிபுரம் நகரில் தனியாா் நிறுவனம் சாா்பில் சேலம் சாலையில் 40 அரங்குகள் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்காட்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆக.14 இல் தொடங்கி ஒரு மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இதில் மேஜிக் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

அதேபோல மற்றொரு திருமண மண்படத்திலும் இதுபோன்ற கண்காட்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாா் இடங்களிலோ, திருமண மண்படத்திலோ வீட்டு உபயோகப் பொருள்காட்சிக்கு அனுமதி வழங்கினால் உள்ளூா் வா்த்தகா்கள் பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இதற்கு நகராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போல... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

குடும்பத் தகராறில் உறவினா்களுடன் சோ்ந்த கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.பரமத்த... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழ... மேலும் பார்க்க

தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடக... மேலும் பார்க்க

தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.பரமத்தி வேலூா் வட்... மேலும் பார்க்க