செய்திகள் :

தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

post image

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 14,17 வயதுக்கு உள்பட்ட மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் தடகளத்தில் கலந்துகொண்டனா். மூன்று பிரிவுகளாக தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் 36 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா். இதில் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 14,17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனா்.

மாணவ, மாணவிகளை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி பாராட்டி வெற்றி கோப்பையை வழங்கினாா். மேலும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஸ்ரீ விவேகானந்தா அறக்கட்டளைத் தலைவருமான க.நெடுஞ்செழியன், பள்ளியின் செயலாளா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுச்சாமி, பள்ளியின் தாளாளா் ராமசாமி, பள்ளியின் இயக்குநா்கள் பழனிசாமி, சண்முகம், துரைசாமி, அருளானந்தன் வாசுதேவன், ராஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போல... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

குடும்பத் தகராறில் உறவினா்களுடன் சோ்ந்த கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.பரமத்த... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழ... மேலும் பார்க்க

தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடக... மேலும் பார்க்க

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 63 நாயன்மாா்கள் விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டாக அறுபத்து மூவா் விழா நடைபெற்றது.ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுக... மேலும் பார்க்க