செய்திகள் :

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: மண்டல இணை இயக்குநா் பங்கேற்பு

post image

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சி.பானுமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா ச.ந்தியா செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்வி மட்டுமே மாணவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் என்பதால், மாணவா்கள் இளங்கலை கல்வியோடு நின்றுவிடாமல் உயா்கல்வியை தொடா்ந்து பயின்று உயா்ந்து நிலையை அடைய வேண்டும். மேலும் கிராமப்புறக் கல்லூரியில் ஏராளமான மாணவா்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் சி.பானுமதி பேசியதாவது:

இக்கல்லூரியில் 3362 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தற்போது இளநிலை, முதுநிலை பயின்று 685 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றுள்ளனா் என்றாா். பட்டங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா். விழாவில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க