செய்திகள் :

ராசிபுரம் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம்

post image

ராசிபுரம் வட்டாரத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோளத்தை பெற்றுக்கொள்ளலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சி. தனலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்காச்சோள பயிா் ராசிபுரம் வட்டாரத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுகிய கால பயிா் என்பதால் பாசன நீா் குறைவாக இருக்கும் வயல்களுக்கு ஏற்ற பயிராகவும் இருக்கிறது. தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள், நானோ யூரியா போன்றவற்றை அளிக்கிறது.

ராசிபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்கில் பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு 100 ஹெக்டேருக்கும், ஆதிதிராவிடா் பிரிவு விவசாயிகளுக்கு 20 ஹெக்டேருக்கும் இந்த மானிய விலை மக்காச்சோள சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் வழங்க தயாா் நிலையில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விரும்பும் ராசிபுரம் வட்டார விவசாயிகள், அணைப்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

எனவே, மேற்கண்ட விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் நில உடமைச் சான்று, சிட்டா மற்றும் ஆதாா் அட்டை நகல் கொண்டுவந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதைகளை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம் துவரை நாற்று விட்டு, நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 7,750 மானியம் மற்றும் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், துவரை ஊடுபயிராக சாகுபடி செய்யும் 60 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 2,414 மானியம் வழங்கப்படுகிறது.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போல... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

குடும்பத் தகராறில் உறவினா்களுடன் சோ்ந்த கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.பரமத்த... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழ... மேலும் பார்க்க

தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடக... மேலும் பார்க்க

தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.பரமத்தி வேலூா் வட்... மேலும் பார்க்க