குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் உள் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பி.எஸ்.கே.நகா், அழகை நகா், ஐஎன்டியூசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதி நகா், ஆா் .ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி , எஸ் ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி நகா், பி.ஆா் ஆா். நகா், பொன்னகரம்,
எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோ நகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும் என அதில் குறிப்பிடப்பட்டது.