செய்திகள் :

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

post image

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட பேருந்தில் 57 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பேருந்திலிருந்து புகை வர ஆரம்பித்திருக்கிறது.

ஓட்டுநர் சுதாரித்து ஓரம் கட்டியபோது சில வினாடிகளில் மொத்த பேருந்தும் பற்றி எரியும் அளவுக்கு நெருப்பு பரவியிருக்கிறது.

சாலையில் சென்றவர்களும் உள்ளூர்வாசிகளும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்ததுடன், மீட்புப் பணிகளிலும் உதவியிருக்கின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்து 5 நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த அக்டோபர் 14ஆம் தேதியே ராஜஸ்தான் முதலமைச்சர் ஜெய்சல்மார் விரைந்துள்ளார். அதிகாரிகள் சேதமடைந்த பேருந்தை பார்வையிட்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்டவுடன் வந்த 3 ஆம்புலன்ஸ்களில் ஜெய்சல்மாரில் இருக்கும் ஜவஹர் மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிலர் ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 15 பயணிகள் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். சிலருக்கு 70 விழுக்காடுக்கும் அதிகமாக காயம் ஏற்பட்டிருக்கிறது.

மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரிவை அமைத்து 8 ஆம்புலன்ஸ்கள் போய்வர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் தெரியாத அளவு எரிந்து சிதைந்துள்ளனர். டி.என்.ஏ மற்றும் தடயவியல் வல்லுநர்கள் அடையாளம் காணும் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். அகமதாபாத் விமான விபத்தைப் போலவே டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50,000-உம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொ... மேலும் பார்க்க

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்க... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதில் இந்திரஜித் மனைவி மற்று... மேலும் பார்க்க