செய்திகள் :

`நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்

post image

கரூர் சம்பவம் சம்பந்தமாக தமிழக அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கு விசாரணையையும் சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து டாக்டர் சரணவனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தனக்குத்தானே பெருமையாக பேசிக் கொள்கிறார்.

Udhayanidhi

ஆனால், நிர்வாக சீர்கேட்டால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றஙகள் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், அதிக குட்டுகளையும் பெற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறார்.

டாக்டர் சரவணன்

ஏற்கனவே சனாதனத்தைப் பற்றி விமர்சித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு திமுக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது, இப்படி பல சம்பவங்கள்.

அதுமட்டுமின்றி, கடன் வாங்கும் மாநிலங்களில் நாட்டிலேயே முதலிடம், லாக்கப் மரணங்களில் முதலிடம், போதைபொருள் நடமாட்டத்தில் முதலிடம், காங்கிரஸ்-திமுக கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்களின் தற்கொலையில் முதலிடம் பெற்று தமிழகம் உள்ளது" என்றார்.

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது - சீனாவுக்காக உளவு பார்த்தாரா?

``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்" ... மேலும் பார்க்க

`பொறுப்புள்ள' சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?

கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. `இது உலக நாடுகளைப் பாதி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில்... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: ``கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது'' - தன்னார்வலர்கள் வேதனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை. இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தைவகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கேசாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும்ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இ... மேலும் பார்க்க

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!* `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிச... மேலும் பார்க்க