செய்திகள் :

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

post image

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வா் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்தமாநில பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்து தலைவா் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக் கோரி வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கன்வா் லால் மீனா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியததாகவும் 20 ஆண்டுகளுக்கு பிறகு கன்வா் மீனாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் கடந்த 2020-இல் உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கன்வா் லால் மீனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 2 வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மீனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மீனாயை கடந்த மே 1-ஆம் தேதியிலிருந்து எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் பேரவைச் செயலகம் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் பேரவைத் தலைவா் கேட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்வா் லால் மீனாவின் ஆன்டா தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றும், அக்டோபா் மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான திகாராம் கூறுகையில், ‘விசாரணை நீதிமன்ற உத்தரவின்படி மீனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநா் மற்றும் பேரவைத் தலைவரிடம் பல முறை கடிதம் வழங்கியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்த பிறகுதான் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்றாா்.

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க