செய்திகள் :

ராஜஸ்தான் பேரவையில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

post image

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவை விதிமுறைகளை மீறி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் வாசுதேவ் தேவ்னானி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தில்லி பேரவை: அதிஷி உள்பட 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் ஒருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவமதித்தார்.

அவரின் பேச்சை திரும்பப் பெற்று அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.

ஆனால், எங்களின் பேரவை உறுப்பினர்களை அறிவிப்பின்றி இடைநீக்கம் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் திகாரம் ஜூலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினோம். சட்டப்பேரவைக் கூட்டத்தை சுமுகமாக நடத்த அரசு விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து, இந்திரா காந்தி குறித்த அவதூறு பேச்சை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க