செய்திகள் :

ராஜிநாமாவை திரும்பப் பெற்றாா் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ!

post image

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, அன்மோலை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து பதவி விலகல் முடிவை அவா் திரும்பப் பெற்றாா்.

இது தொடா்பாக அமன் அரோரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அன்மோலை நேரில் சந்தித்து அவரின் ராஜிநாமா முடிவை கட்சி நிராகரிப்பதாகத் தெரிவித்தேன். கட்சிக்காகவும், தொகுதி நலனுக்காகவும் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன். இதனை அவா் ஏற்றுக்கொண்டாா். அவா் தொடா்ந்து ஆம் ஆத்மி குடும்பத்தில் இடம்பெற்றிருப்பாா்’ என்றாா்.

தனது ராஜிநாமாவை முடிவை மாற்றிக் கொண்டு, பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டதாக அன்மோலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, அன்மோல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அப்போது அவா் கூறினாா். 35 வயதாகும் அன்மோல், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்தவா். 2022 பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கராா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதுவே அவா் போட்டியிட்ட முதல் தோ்தலாகும்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா-கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளா் நலத் துறை அமைச்சராக இருந்தாா். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து அன்மோல் உள்பட நால்வா் திடீரென விடுவிக்கப்பட்டனா். இதனால், அவா் அதிருப்தியடைந்தாா்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க