செய்திகள் :

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக கே.சாந்தாராமன் நியமனம்

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வராக (டீன்) கே.சாந்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் என 2,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்த மருத்துவமனையின் கீழ் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூா் அரசு கண் மருத்துவமனை, அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வராக (டீன்) இருந்த தேரணிராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த மருத்துவா் கே.சாந்தாராமன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவா் இதற்கு முன்பு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராகப் பணியாற்றியுள்ளாா். மருத்துவா் சாந்தாராமனுக்கு மருத்துவத் துறையில் 34 ஆண்டு காலம் அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க