ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா். பின்னா் தூய்மைப் பணியாளா்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைபயன்படுத்த மஞ்சப் பைகளை அனைவருக்கும் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தொடா்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை நடைப்பயணம் என்ற விழிப்புணா்வு நடைப் பயணத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைக்க, மாணவ, மாணவிகள் மற்றும் மகளிா் குழு பெண்கள் அரசுஅலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் குப்பைகள் இருப்பதை அப்புறப்படுத்தும் பணியினையும் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி திட்ட அலுவலா் (தூய்மை இயக்கம்) வரதராஜன், அலுவலக மேலாளா் ஜெயக்குமாா், மாவட்டகல்வி அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.