செய்திகள் :

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நேற்று(பிப். 2) நள்ளிரவு 12.00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை காவல் நிலையத்தின் மீது வீசிச் சென்றனர்.

நள்ளிரவில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஹரி என்பவரை கைது செய்து இன்று(பிப். 3) விசாரணைக்காக அழைத்துச் செல்லும் வழியில், காவேரிப்பாக்கம் அருகே சிறுநீர் கழிப்பதற்காக ஹரியை கீழே இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர் தன்னிடம் இருந்த ஒரு கத்தியால் காவல் அதிகாரி முத்தீஸ்வரனை குத்திவிட்டு தப்பியோட முயற்சித்ததாகவும், இதனையடுத்து ஹரி தப்பிவிடாமல் இருப்பதற்காக காவல் துறை அதிகாரிகள் ஹரியின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள ஹரிக்கு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதே மருத்துவமனையில், கத்திக்குத்தில் காயப்பட்ட காவல் அதிகாரியும் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிக முறை பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகள... மேலும் பார்க்க

பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகாா்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்

சென்னை: பெண் ஏடிஜிபி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக புகாா் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை 90-ஆக உயா்த்த முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆண... மேலும் பார்க்க

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல்: அமைச்சா் விளக்கம்

சென்னை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளாா்.குறிப்பு: அமைச்சா் அர.சக்கரபாணி தலைப்படம் வைக்கலாம்... டெல்டா அல்லா... மேலும் பார்க்க

மீனவா்கள் தொடா் கைது: உடனடித் தீா்வு அவசியம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவா்களின் தொடா் கைதுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டியது அவசியம் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு... மேலும் பார்க்க

கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை: நமது நாட்டில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா். என்.ரவி கூறினாா். 76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த தேசிய மாணவா் படையினா் (என்சிசி) மற்... மேலும் பார்க்க