செய்திகள் :

ராணுவ அதிகாரி வேஷம்: `பாலியல் வன்கொடுமை செய்ய நாடகம்' - போலீஸில் சிக்கிய இளைஞர்

post image

பெண் மருத்துவருடன் பழக இராணுவ அதிகாரி போல வேடமிட்ட டெலிவரி முகவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரவ் மாலிக் (27). இவர் தனியார் வணிக நிறுவனத்தில் டெலிவரி முகவராக பணியாற்றி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் டெல்லியின் முன்னணி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இருவரும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவரை அவருடைய இல்லத்தில் சந்திக்க திட்டம் தீட்டிருக்கின்றார். அதன் அடிப்படையில், மருத்துவரின் இல்லத்துக்கு இராணுவ அதிகாரிப் போன்ற உடை அணிந்து வந்திருக்கிறார் ஆரவ்.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை

இருவரும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆரவ்வின் செயல்பாடுகள் மீது சந்தேகமடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை ஆரவ்வை கைது செய்திருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``குற்றம் சாட்டப்பட்டவர் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து ராணுவ சீருடையை ஆன்லைனில் வாங்கியது தெரியவந்தது. ஆரவ்வுக்கு இந்திய ராணுவத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

மருத்துவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சீருடையில் இருக்கும் தனது புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார். பின்னர், அந்த மருத்துவரின் வீட்டிற்குச் சென்று, அவருக்கு எதையோ சாப்பிடக் கொடுத்து பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க