ராமநாதபுரத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், கலவரத்தின் போது செயல்படும் விதம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், ஆயுதப்படை காவல் துணைக் காண்காணிப்பாளா் முத்துராமலிங்கம், ஆய்வாளா் ரோஸ்லெட், உதவி ஆய்வாளா் சுனில்குமாா் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்துகொண்டனா்.