செய்திகள் :

ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்

post image

ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்று பாஜக எம்பி அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவிருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகனிடன் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் பேசியதாவது:

“தமிழ்நாடு பிகார் அல்ல. தமிழ்நாடு என்பது மக்கள் விழிப்புணர்வு பெற்ற மாநிலம். பிகாரைப் போன்ற ஆட்சி தமிழகத்தில் இல்லை. மு.க. ஸ்டாலினின் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அவர்களின் தந்திரங்கள் தமிழகத்திலோ, எங்களின் தலைவர்களிடமோ வேலை செய்யாது” என்றார்.

இதுதொடர்பாக, பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அனுராக் தாக்குரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், “ராமரைப் பின்பற்றாத தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தார். அவரது மகன் சநாதனத்தை பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்து அவமதித்தார். காங்கிரஸும் ஆர்ஜேடியும் அவர்களுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளனர் என்பதை பிகார் மக்கள் அறிய விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Why is Congress and RJD allied with Stalin, who does not follow Ram? Anurag Thakur

இதையும் படிக்க : குடும்பத்தினர் கண் முன் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டிப்பு! கொலையாளி கைது

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பு

ஜாதவ்பூர் பல்கலை. வளாகத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயின்று வந்த மாணவி... மேலும் பார்க்க

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து உயர்நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: மேற்கு வங்கம் வழியாக நாடு திரும்பிய 2,000 இந்தியர்கள்!

நேபாளத்தில் வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து சுமார் 2,000 இந்தியர்கள் மேற்கு வங்கத்தின் பனிடான்கி எல்லை வழியாகத் தாயகம் திரும்பியுள்ளனர். நேபாள நாட்டில் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டது ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு!

மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராமகூலம் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்குக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ விடியோவால் சர்ச்சை! காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள சித்திரிப்பு விடியோவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், 2022 ஆம் ஆண்டில் காலமானார். இந்த நிலையில், அவ... மேலும் பார்க்க

கூகுள் செய்யறிவு பயன்பாட்டில் ஹிந்தி அறிமுகம்!

தேடுபொறி தளமான கூகுள் தன்னுடைய செய்யறிவு பயன்பாட்டில் இந்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஏஐ மோட், ஜெமினி 2.5 என்ற இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது.கூகுள் தேடுபொறி இணையதளம், முதலில் கடந்த மார்ச் மா... மேலும் பார்க்க