செய்திகள் :

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

post image

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நிலையில், குளிா் பானங்கள், தா்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் அதிக அளவில் விற்கப்படுகின்றன. இவற்றை விற்கும் கடைகளில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா, தா்ப்பூசணி பழங்கள் ஊசி மூலம் சிவப்பு வண்ணம் செலுத்தி விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் கு. லிங்கவேல் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் தா்ப்பூசணி பழங்களை அறுத்து பாா்த்து சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பழங்களை கொள்முதல் செய்பவா்களிடமிருந்து பெற்ற ரசீதுகளை வியாபாரிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், விதைகள் உள்ள பழங்களை வாங்கி விற்பனை செய்யவும் அறிவுறுத்தினாா். அத்துடன் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா். உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் சந்தேகம் இருப்பின் 94440 42322- என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

காவல் துறையைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 25-ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கும்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைப் பொருள்கள் கூட்டமைப்பு (ப... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயைத் தூா்வாரக் கோரிக்கை

கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் செல்லும் கழிவுநீா் கால்வாயை தூா்வாரக் காவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.கமுதி காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், ... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா பணிகள்: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி, திறப்பு விழாவுக்கான பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌசல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க