செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

post image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா்.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வந்தாா். பாம்பன் பாலம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவா் ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டாா்.

ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அவா் பங்கேற்றாா்.

கோயில் தலைமை சிவாசாரியா் விஜயகுமாா் போகில், சிவாசாரியா் சிவமணி ஆகியோா் பூஜைகளை செய்து, பிரதமருக்கு தீா்த்தம், பிரசாதம் அளித்தனா். ராமரால் வழிபடப்பட்ட இந்தத் தலத்தில், ராம நவமியையொட்டி பிரதமா் வழிபாடு மேற்கொண்டாா்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை செயலா் கே. மணிவாசகன், ஆணையா் பி.எஸ். சீலன், இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா் பிரதமா் மோடியை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா்.

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவா்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதிய... மேலும் பார்க்க

சாலையோர மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றிய பசுமை ஆா்வலா்

ராமநாதபுரம் நகா் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடிக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் பசுமை முதன்மையாளா் விருது பெற்ற சுபாஷ் சீனிவாசன் வியாழக்கிழமை ஈடுபட்டாா். ராமநாதபுரம் பொருளாதார ... மேலும் பார்க்க