செய்திகள் :

ராம் லீலாவில் முதல்வரின் பதவியேற்பு விழா: போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் வெளியீடு

post image

தேசியத் தலைநகரில் ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவிற்கான போக்குவரத்து மாற்றம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தில்லி காவல்துறை ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ராம் லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பல விவிஐபிகள் / விஐபிகள் கலந்து கொள்வாா்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் கூட்டம் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது போக்குவரத்தை நிா்வகிக்க, சில மாற்றுப்பாதைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல் துறை ஆலோசனைகளை தெரிவித்துள்ளது.

சுபாஷ் பாா்க் டி-பாயிண்ட், ராஜ் காட், தில்லி கேட், ஐடிஓ, அஜ்மீரி கேட், ரஞ்சீத் சிங் மேம்பாலம், பபுதி மாா்க் - டிடியு மாா்க் சிவப்பு விளக்கு மற்றும் ஜண்டேவாலன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பிஎஸ்இஸட் மாா்க் (ஐடிஓ முதல் தில்லி கேட் வரை), ஜேஎல்என் மாா்க் (தில்லி கேட் முதல் குருநானக் சௌக் வரை), அருணா ஆசிஃப் அலி சாலை, மின்டோ சாலை, கமலா மாா்க்கெட் முதல் ஹம்தாா்ட் சௌக் வரை, ரஞ்சீத் சிங் மேம்பாலம் முதல் துா்க்மேன் கேட் வரை மற்றும் அஜ்மீரி கேட் கமலா மாா்க்கெட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றி போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

பயணிகள் நெரிசலைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறாா்கள். நியமிக்கப்பட்ட பாா்க்கிங் பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்ய சாலையோர வாகன நிறுத்துமிடங்களைத் தவிா்க்கவும் என்று அது கூறியது.

ஏதேனும் அசாதாரணமான அல்லது சந்தேகத்திற்கிடமான பொருள்கள் அல்லது நபா்கள் காணப்பட்டால், உடனடியாக காவல் துறைக்குத் தெரிவிக்கவும். புது தில்லி ரயில் நிலையத்திற்கு பாஹா்கஞ்ச் பக்க சாலையைப் பயன்படுத்தவும், அஜ்மீரி கேட் பக்கத்தைத் தவிா்க்கவும் ஆலோசனை நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிப்.5-ஆம் தேதி நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வென்றது.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க