செய்திகள் :

ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

post image

மும்பை: இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பை முன்னிட்டும், தொடர்ச்சியாக அந்நிய நிதியானது வங்கிப் பங்குகளை விட்டு வெளியேறுவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,851.38 புள்ளிகளும் பிறகு குறைந்தபட்சமாக 80,248.84 புள்ளிகளை எட்டிய நிலையில், ஏற்றம் மற்றும் சரிவின் இடையில் சுழன்ற வந்த இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 61.52 புள்ளிகள் சரிந்து 80,364.94 ஆகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி 19.80 புள்ளிகள் சரிந்து 24,634.90 ஆக நிலைபெற்றது. தொடர்ந்து முதலீட்டாளர்களின் விற்பனையால் நிஃப்டி தொடர்ந்து ஏழு அமர்வுகளில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

சென்செக்ஸில் மாருதி, ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிந்தும் டைட்டன், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எடர்னல் மற்றும் டிரென்ட் ஆகியவை உயர்ந்தும் முடிந்தன.

நிஃப்டி-யில் ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, எல் அண்ட் டி, அப்பல்லோ மருத்துவமனைகள், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ஆகியவை சரிந்த நிலையில் எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, விப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி, எரிசக்தி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் தலா 1 சதவிகிதம் அதிகரித்த வேளையில் மீடியா குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்து முடிந்தன.

தொடர்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனையை செய்து வருவதால், முதலீட்டாளர்கள் கடந்த சில அமர்வுகளாக மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் உள்நாட்டு பங்குச் சந்தை நிலையற்ற அமர்வில் முடிவடைந்தன. இதற்கிடையில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ம் குறித்த தெளிவின்மையால் ஐடி மற்றும் மருந்து குறியீடுகள் மீதான நீண்டகால அழுத்தம் குறித்து கவலையில் முதலீட்டாளர்கள் ஆழ்ந்தனர்.

எஃப்&ஓ தடையிலிருந்து பங்குகள் வெளியேறியதால் சம்மன் கேபிடல் பங்குகள் 11% க்கும் அதிகமாக உயர்ந்தன. ரூ.32 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டரில் பெற்றதையடுத்து எஸ்.இ.பி.சி. பங்குகள் 1% அதிகரிப்பு. வீல்ஸ் இந்தியா பங்குகள் தென் கொரிய நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் 4% அதிகரித்தன. ரிலையன்ஸ் பவர் இந்தோனேசியாவின் நிலக்கரி துணை நிறுவனங்களை பயோடிரஸ்டருக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததால் 1% அதிகரித்தது.

ரேஸ்மோசா எனர்ஜியில் 76% பங்குகளை வாரீ எனர்ஜிஸ் வாங்கியதால் அதன் பங்குகள் 2% உயர்ந்தன. இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் புதிய ஆலையில் ரூ.100 கோடி முதலீடு செய்யவுள்ளதால் அதன் பங்குகள் 2% சரிந்தன. அதானி இன்ஃப்ராவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வாஸ்கான் இன்ஜினியர்ஸ் கையெழுத்திட்டதால் அதன் பங்குகள் 11% உயர்ந்தன. சிஜிஎஸ்டி அபராதம் விதித்த பிறகு சம்பல் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் 2% சரிந்தன.

சுப்ரீம் பெட்ரோ, உஷா மார்ட்டின், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப், இந்தியன் வங்கி, ஆர்பிஎல் வங்கி, மிண்டா கார்ப் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று உயர்ந்து முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று ரூ.5,687.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,843.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.25 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய் ஒன்றுக்கு 69.25 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

Benchmark stock indices Sensex and Nifty closed marginally lower in a volatile session on Monday, extending their downtrend to the seventh day, as bank stocks were dragged by persistent foreign fund outflows ahead of the RBI interest rate decision later this week.

ஒய் ரக கார்களின் விநியோகத்தை தொடங்கிய டெஸ்லா இந்தியா!

புதுதில்லி: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒய் ரக கார்களை அறிமுகப்படுத்திய பிறகு, அதன் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக டெஸ்லா இந்தியா இன்று அறிவித்துள்ளது.இரண்டு மாதங்களுக்குள் தனது 'ஒய்' மாடலின் விநியோகத்தை தொடங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.79ஆக நிறைவு!

மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 7 காசுகள் சரிந்து ரூ.88.79 ஆக முடிவடைந்தது.உலகளாவி... மேலும் பார்க்க

வாரத்தின் முதல் நாள்.. உயர்வுடன் பங்குச் சந்தை தொடக்கம்

மும்பை: வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை நிஃப்டி 50 மற்றும் மும்பை பங்குச் சந்தைக குறியீடுகள் உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியிருக்கின்றன.கடந்த வாரம் கடுமையான வீழ்ச்சிகளை சந்தித்து வந்த பங்குச் சந... மேலும் பார்க்க

பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி

புதுதில்லி: பெங்களூரில் வீட்டுச் சந்தை வலுவாக உள்ளதாகவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் அதன் விற்பனை 21 சதவிகிதம் அதிகரித்து சுமார் 16,840 வீடுகள் விற்பனையாகும் என்றது ப்ராப் ஈக்விட்டி.ரியல... மேலும் பார்க்க

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது. இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உரு... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செ... மேலும் பார்க்க