செய்திகள் :

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ

post image

மோசடி புகார்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் விளம்பரதாரர் இயக்குனர் அனில் அம்பானி மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ2000 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக வங்கி மோசடி புகார் அளித்திருக்கிறது.

கடந்த மாதம் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ தகவலில், ''ஆர்.காம்-மில் எஸ்.பி.ஐ-யின் கடன் ஆகஸ்ட் 26, 2016 முதல் அசல் தொகையாக ரூ.2,227.64 கோடியும், வட்டி மற்றும் இதர செலவுகளாக ரூ786.52 கோடியும் வழங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

அனில் அம்பானி

அதைத் தொடர்ந்து, எஸ்.பி.ஐ வங்கி, ரிசர்வ் வங்கியின் மோசடி ஆபத்து மேலாண்மை வழிமுறைகள் மற்றும் வங்கியின் கொள்கையின்படி, ஆர்.காம் நிறுவனம் ஜூன் 13, 2025 அன்று மோசடி செய்ததாக வகைப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஜூன் 24, 2025 அன்று வங்கி, இந்த மோசடி வகைப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்து, சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அனில் அம்பானியின் வீடு மற்றும் ஆர்.காம் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

திவால்நிலை

ஆர்.காம் நிறுவனம், திவால்நிலை மற்றும் திவால்நிலைச் சட்டம், 2016-ன் கீழ் கார்ப்பரேட் திவால்நிலைத் தீர்வு செயல்முறைக்கு உட்பட்டுள்ளது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

இதற்கான தீர்வுத் திட்டம் கடன் வழங்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, மார்ச் 6, 2020 அன்று மும்பையில் உள்ள தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (NCLT) தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தீர்வுத் திட்டம் NCLT-யின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், எஸ்.பி.ஐ வங்கி, அனில் அம்பானிக்கு எதிராக தனிப்பட்ட திவால்நிலைத் தீர்வு செயல்முறையை IBC-யின் கீழ் தொடங்கியுள்ளது. இதுவும் மும்பை NCLT-யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!

''மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் 100 கோடீஸ்வரர்களை உருவாக்குவேன்" என்று கடந்த 2016-ஆம் ஆண்டில் நாணயம் விகடனுக்கு பேட்டி அளித்திருந்தார் கோவையைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கண்ணன். அ... மேலும் பார்க்க

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன்? என்ன காரணம்?

என்ன தான் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற முதலீடு ஆப்ஷன்கள் இருந்தாலும், இன்னும் நம் மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர். அதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்... மேலும் பார்க்க

குளித்தலை: வீடு புகுந்து ஆயுதங்களால் தாக்கி பணம், நகை கொள்ளை; பள்ளி தாளாளர் வீட்டில் பயங்கரம்

பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கருணாநிதி, இவரது மனைவி சாவித்திரி. கருணாநிதி குளித்தலை... மேலும் பார்க்க

மும்பை: ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்த மூதாட்டி; ரூ.18 லட்சத்தை இழந்த `அதிர்ச்சி' சம்பவம்!

மும்பையில் பால் ஆர்டர் செய்ய முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் ரூ.75 கோடி மோசடி' - நடிகை ஷில்பா ஷெட்டி மீது FIR பதிவு செய்த காவல்துறை

நடிகை ஷில்பா ஷெட்டி - அவரின் கணவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர... மேலும் பார்க்க

Sandeepa Virk: `ரூ.40 கோடி மோசடி' ED ரெய்டில் இன்ஃப்ளூயன்சர் கைது - என்ன நடந்தது?

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பணமோசடி தொடர்பாக மும்பை, டெல்லியில் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் தொழிலதிபர் சந்தீபா விர்க் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை... மேலும் பார்க்க