செய்திகள் :

ரிஷப் பந்த் வீட்டுல விசேஷம்..! நடனமாடிய தல தோனி, சின்ன தல ரெய்னா!

post image

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரி திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் கலந்துகொண்டு நடனமாடிய விடியோக்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணியின் இடம்பிடித்திருந்தார் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த். இந்த நிலையில் உத்தரகாண்டில் உள்ள முசோரியில் நடைபெறும் அவரது சகோதரி சாக்‌ஷி பந்தின் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக உடனடியாக துபையில் இருந்து தாயகம் திரும்பினார்.

ரிஷப் பந்தின் சகோதரி சாக்‌ஷி பந்த், அவரின் நீண்ட கால காதலரான அங்கித் சௌத்ரி இருவரின் திருமணம் இன்று நடைபெறுகிறது. மெஹந்தி, சங்கீத் மற்றும் ஹால்டி விழாக்களில் ரிஷப் பந்த் பங்கேற்றார். திருமண விழாக்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோகளை சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!

நேற்று இரவு நடைபெற்ற ஹால்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அவரது மனைவி சாக்‌ஷியுடன் செவ்வாய்க்கிழமை மாலை முசோரிக்கு வந்தார். தோனி மட்டுமின்றி ரெய்னாவும் அவரது மனைவியும் இந்தவிழாவில் கலந்துகொண்டார்.

தோனி, ரெய்னா, பந்த், மற்றும் சில நண்பர்கள் தோள் மீது கைகோர்த்து நடனமாடும் விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி வென்ற பின்னர் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பியிருப்பதால், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது: பாக். முன்னாள் கேப்டன்

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!

சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ஐசிசி வ... மேலும் பார்க்க

சிறந்த வீரருக்கான ஐசிசியின் விருதை 3ஆவது முறையாக வென்ற ஷுப்மன் கில்..!

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கா... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

மே.இ.தீ. அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமா... மேலும் பார்க்க

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக்: இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இன்டர்நேஷ்னல் மாஸ்டர் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றமடைந்துள்ளது. மார்ச்.1 முதல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஆஸ... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வா... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டேன்! -ஷ்ரேயஸ்

பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்ட பின் வாழ்வில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அசத்தலாக வி... மேலும் பார்க்க