செய்திகள் :

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

post image

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார்.

ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆர்சிபி வெல்ல, எலிமினேட்டரில் மும்பை வென்றது.

எலிமினேட்டரில் மும்பைக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன்மூலம், அதிக விக்கெட்டுகள் (25) எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

15 போட்டிகளில் விளையாடி பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை எடுக்க, நூர் அகமது 14 போட்டிகளிலேயே 24 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அடுத்தடுத்த நிலைகளில் ஹேசில்வுட், போல்ட் சமநிலையில் இருக்கிறார்கள்.

குவாலிஃபயர் 2-இல் போல்ட் விளையாடுகிறார், அதில் வென்றால் இறுதிப் போட்டியிலும் விளையாடுவார். அதனால், அதிக விக்கெட்டுகள் எடுக்க ஹேசில்வுட்டை விட அவருக்கே அதிகமான வாய்ப்பிருக்கிறது.

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் நாளை (ஜூன்.1) அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் ஜூன்.3ஆம் தேதி ஆர்சிபியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள்

1. பிரசித் கிருஷ்ணா - 25 (குஜராத், 15 போட்டிகள்)

2. நூர் அகமது - 24 (சிஎஸ்கே, 14 போட்டிகள்)

3. ஹேசில்வுட் - 21 (ஆர்சிபி, 11 போட்டிகள்)

4. டிரெண்ட் போல்ட் - 21 (மும்பை, 15 போட்டிகள்)

5. சாய் கிஷோர் - 19 (குஜராத், 15 போட்டிகள்)

அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படும். சீசன் முடிவில் அதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகையை யார் பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஜூன்.3ஆம் தேதிதான் பதில் கிடைக்கும்!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேல... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்ற... மேலும் பார்க்க

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுநாள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் புதிய வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ள ... மேலும் பார்க்க

ஆர்சிபி கோப்பை வெல்ல கோயில்களில் சிறப்பு வழிபாடு!

பெங்களூரு: ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டி அந்த அணியின் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதனால் பெங்களூரு மாநகரில் பல கோயில்களிலும் சிவப்பு நிற ஆடைய... மேலும் பார்க்க

நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற கேள்விக்கு, “நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் எல்லாமே தோற்கின்றன. இறுதிப் போட்டியில் ஆர்சிபிக்கு ஆதரவு” என சேவாக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் ... மேலும் பார்க்க