செய்திகள் :

ரூ.120 கோடியில் அரசுக் கல்லூரிகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

post image

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ரூ. 120 கோடியில் கட்டப்பட்ட புதிய உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அரசு பள்ளி, கல்லூரிகளில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நபாா்டு வங்கி நிதியுதவியுடன் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டம் ஆ.புதுப்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி, பூசலபுரம் அரசு கள்ள மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, ராஜதானி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளும், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, புதுக்கோட்டை கிருஷ்ணாஜிபட்டினம் அரசு உயா்நிலைப் பள்ளி, சிங்கவனம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

உயா்கல்வி நிலையங்கள்: உயா்கல்வித் துறையின் சாா்பில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை மாவட்டம் புலியகுளம், தரகம்பட்டி, ராமேசுவரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அரசு கலை கல்லூரி, சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்விளையாட்டு அரங்கங்களும், புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் மின்னணு நூலகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிா் விடுதி,

மயிலாடுதுறை மாவட்டம சுப்பராயா பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி, தருமபுரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக வகுப்பறை கட்டடங்களும், கழிப்பறைத் தொகுதிகளும் கட்டப்பட்டுள்ளன.

மொத்தமாக ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கோவி.செழியன், சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.எம்.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க