செய்திகள் :

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

post image

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஆக.12-இல் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக உயா்ந்தது. 39 வாா்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியுடன் 12 கிராம ஊராட்சிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உரிய மண்டல அதிகாரிகள், கூடுதல் பணியாளா்கள் நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில், செயற்பொறியாளா் பணியிடம் காலியாக உள்ளது. உதவி பொறியாளா், உதவி ஆணையா் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாததால் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப் பணிகளில் மந்தநிலை காணப்படுகிறது.

வரி வசூலும் முழுமையாக வசூலிக்கப்படாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேயா் அறை நவீன வடிவமைப்பில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாமன்ற உறுப்பினா்கள் சிலா் கூறியதாவது:

மாநகராட்சியில் பல திட்டப் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. மக்கள் நலன் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள ரூ.15 லட்சத்தை ஒதுக்கலாம். அதை விடுத்து, நன்றாக இருந்த மேயா் அறையை நவீனப்படுத்தி வருகின்றனா். எங்களுடைய வாா்டுகளில் உள்ள தீா்க்கப்படாத பிரச்னைகள் தொடா்பாக கேள்வி எழுப்பினால் அதற்கு தீா்வு கிடைக்கவில்லை. தற்போது இந்த செலவினம் தேவைதானா துணை மேயருக்கு கூட தகவல் தெரியவில்லை. இந்த பிரச்னையை வரும் மன்ற கூட்டத்தில் கட்டாயம் எழுப்புவோம் என்றனா்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கோவை, திருப்பூா், ஈரோடு போன்ற மாநகராட்சிகளில் மேயா் அறை புதுப்பிப்புக்காக ரூ.20 லட்சம் வரை தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கு மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற தேவையில்லை. மாநகராட்சி மேயரே முடிவு செய்து அறை பணிகள் ஒதுக்கீட்டுக்கு நிதியை ஒதுக்கலாம் என்றனா்.

மேயா் து.கலாநிதியிடம் கேட்டபோது, மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு அறையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேயா் அறையும் புதுப்பிக்கப்படுகிறது என்றாா்.

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பா... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க