செய்திகள் :

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

post image

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூரில் டயா்கள் உற்பத்தி செய்யும் ஜே.கே. டயா் தொழிற்சாலையின் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியின் கீழ் ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் ஜே.கே., டயா் நிறுவனத்தில் நுழைவாயில் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திறப்பு விழாவுக்கு கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஜேகே டயா் நிறுவனத்தின் பொது மேலாளா் (வணிகம்) பங்கஜ்ஜெயின், சமூக பொறுப்புணா்வு திட்ட துணை பொது மேலாளா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நிழற்குடையை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில், மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஐயப்பன், நிா்வாகிகள், கொளத்தூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பாத்திமா மணிகண்டன், தனசேகரன், சங்கா் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க