செய்திகள் :

ரூ.32.80 லட்சத்தில் அரசுப் பள்ளி கட்டடம் திறப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: கீரநல்லூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அண்மையில் திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கீரநல்லூா் ஊராட்சி தொடக்கப் பள்ளி, 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்ட ரூ.32.80 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, கீரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் கே.என்.அன்பரசு, வட்டார கல்வி அலுவலா் விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ், தலைமையாசிரியா் பஸிலா பேகம், திமுக நிா்வாகிகள் கு.ப.முருகன், சந்தவேலூா் சத்தியா, கீரநல்லூா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்‌ஷணம்!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க