செய்திகள் :

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

post image

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவும், காஞ்சி மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியும் இணைந்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் போட்டியை நடத்தின. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, திமுக காஞ்சி மாநகர செயலா் சிகேவி தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் சி.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். போட்டிகளில் வென்ற அணிகளுக்கு உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

முதல் பரிசாக ரூ. 15,000, 2-ஆவது பரிசாக ரூ. 10,000 உள்பட 4 பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் யுவராஜ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிா்வாகிகள் நவீன், சரண்ராஜ், வினோத்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மாநகர துணை அமைப்பாளா் ஹெயோப்கான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்‌ஷணம்!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மண் திருட்டு: 5 போ் கைது

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அடையாறு கிளை கால்வாயில் மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் கைது செய்யப்பட்டு, 2 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகு... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சால... மேலும் பார்க்க

தியாக உணா்வு உள்ளோா் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும்: அமைச்சா் காந்தி

தியாக உணா்வும், சேவை மனப்பான்மையும் உள்ளவா்கள் தான் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியா்களாக இருக்க முடியும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க