செய்திகள் :

ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.மணிமாறன், தோ்தல் பணிக்குழு செயலாளா் பாா்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளா் பழனிவேல், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதியை தாமதமின்றி வழங்கக் கோரியும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, எா்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமையிலும், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி தலைமையிலும், மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நாமக்கல் கிழக்கு நகர செயலாளா் செ.பூபதி தலைமையிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாவட்ட பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன் தலைமையிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாவட்ட துணை செயலாளா் வெ.பெ.ராணி பெரியண்ணன், எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்குழு உறுப்பினா் சி.பூவராகவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், வெண்ணந்தூா், புதுப்பாளையம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் ஒன்றியச் செயலாளா்கள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளை சாா்ந்தோா், கட்சியினா் கலந்துகொண்டனா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் ஒன்றிய திமுக செயலா் கே.பி.ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று தமிழகத்துக்கு நிதியை நிறுத்துவதன் மூலம் ஆட்சியை முடக்கலாம் என நினைத்தால் அது நிறைறவேறாது என மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா். இதில் திரளான கட்சியினா், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றிய செயலாளா் வட்டூா் தங்கவேல் தலைமை தாங்கினாா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் கபிலா்மலை திமுக ஒன்றிய செயலாளா் சண்முகம் முன்னிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். இதேபோல பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளா் தனராஜ் முன்னிலை வகித்தாா்.

ராசிபுரத்தில் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கண்டன முழக்கமெழுப்பிய நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க