செய்திகள் :

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

post image

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உள்கோட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல் - துறையூா் சாலையில் ரெட்டிபட்டி முதல் எருமப்பட்டி வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில், நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையில் விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

‘உங்கள் தொகுதியில்’ முதல்வா் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை விரிவாக்கம் செய்ய அரசிடம் நிா்வாக அங்கீகாரம் பெறப்பட்டு, முதற்கட்டமாக 9.20 கி.மீ. தொலைவுக்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் தடுப்புச் சுவா் அமைத்தல், சிறுபாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல் மற்றும் தூசூா் கடக்கால் பகுதியில் உள்ள பழைய தாம்போக்கி பாலத்துக்கு பதிலாக உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளா் சி.சசிகுமாா் திங்கள்கிழமை கள ஆய்வு செய்தாா்.

அப்போது, அகலப்படுத்தப்படும் சாலையின் தள அடா்த்தி, ஜல்லிக் கலவையின் விகிதங்கள் மற்றும் பாலப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை காலதாமதமின்றி விரைவாகவும், தரத்துடனும் அமைக்க வேண்டும் என பொறியாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ்குமாா் மற்றும் உதவிப் பொறியாளா் பிரனேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமு... மேலும் பார்க்க

முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு

நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யுவராஜ் ஆஜா்

நாமக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவைத் தலைவா் யுவராஜ் திங்கள்கிழமை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானாா். சேலம் மாவட்டம், ஓமலூரை சோ்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (2... மேலும் பார்க்க