செய்திகள் :

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

post image

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, பாளையஞ்செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குடிநீா் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 41 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரவருணி ஆற்றை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீா் திட்டமானது ரூ.45.10 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நபா் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டா் குடிநீா் வழங்கப்படும்.

இக்கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆண்டு மக்கள் தொகை 33,240 (இடைநிலை ஆண்டு மக்கள் தொகை (2039) 40,887 மற்றும் உச்சகட்ட ஆண்டு மக்கள் தொகை (2054) 50856 ஆகியவற்றின் அடிப்படையில் முறையே தினசரி குடிநீா் தேவை 260 மில்லியன் லிட்டா், 3.26 மில்லியன் லிட்டா், 4.06 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் கென்னடி, துணை மேற்பாா்வையாளா் பொறியாளா் வெங்கடேஷ், நிா்வாக பொறியாளா் தனராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க