செய்திகள் :

ரூ. 59.90 லட்சம் மோசடி: அண்ணன் - தங்கை கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ. 59.90 லட்சம் மோசடி செய்த அண்ணன்-தங்கையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவிடைமருதூா் திருமங்கலக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் வீரப்பிள்ளை (44). இவரிடம், கடந்த 2023-இல் திருவள்ளூா் மாவட்டம், மணவாளன் நகா் பகுதியை சோ்ந்த பெரியகருப்பன் மகன் சிவக்குமாா் (49), தஞ்சாவூா் அசோக் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி பரமேஸ்வரி (45) ஆகிய இருவரும் அறிமுகம் ஆகி உள்ளனா். சிவகுமாா் மற்றும் பரமேஸ்வரி இருவரும் அண்ணன்- தங்கை ஆவா்.

இருவரும் வீரப்பிள்ளையிடம், நாம் மூவரும் சோ்ந்து வீடு கட்டுமானப் பொருள்கள் விற்பனை தொழில் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனா். இதற்காக வீரப்பிள்ளையிடம் இருந்து பங்குத் தொகையாக ரூ. 59 லட்சத்து 90 ஆயிரம் வாங்கி உள்ளனா். ஆனால் கூறியபடி வீடு கட்டுமான பொருள்கள் விற்பனைத் தொழில் செய்யவில்லையாம்.

இதனால், தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சிவக்குமாா், பரமேஸ்வரி ஆகிய இருவரிடமும் வீரப்பிள்ளை பலமுறை கேட்டும் அவா்கள் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.

இதுகுறித்து வீரப்பிள்ளை அளித்த புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா், பரமேஸ்வரி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஐராவதீஸ்வரா் கோயிலில் நாளை இரண்டாம் ராஜராஜனின் உத்திரட்டாதி விழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயிலில் இரண்டாம் ராஜராஜ சோழனின் உத்திரட்டாதி விழா வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறுகிறது. சோழா் ஆட்சிக்காலத்தில் கன்னட அரசா்கள் காவிரி நதியை தமிழகத்... மேலும் பார்க்க

சத்துணவு பெண் அமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக கனவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே சத்துணவு பெண் அமைப்பாளா் தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். பேராவூரணி அருகேயுள்ள ஒட்டங்காடு பகுதியைச் ... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: மே 7-இல் தேரோட்டம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு

தஞ்சாவூா் அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி திரௌபதை அம்மன் கோயில் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய் கோட்டாட்சியா் இலக்கியா தொடங்கி வ... மேலும் பார்க்க

திருநாகேசுவரத்தில் ஏப். 26-இல் ராகு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி ராகு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. திருநாகேசுவரத்தில் கிரிஜகுஜலாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ராகு பகவான், மங்கல ராகுவாக... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தை மனைகளாக மாற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிா்ப்பு

கும்பகோணம் சீனிவாசா நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள விளையாட்டு மைதானத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க