செய்திகள் :

ரெட் அலர்ட்: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப் படை விரைவு!

post image

மே 25, 26-ல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து கோவை, நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக இன்று(மே 23) முதல் மே 27 வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மே 25, 26-ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை(ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, நீலகிரி, கோவைக்கு பேரிடர் மீட்புப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்புப் படையும் ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

மாவட்ட தீயணைப்புத் துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மே 25, 26ல் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை தாழ்வு மண்டலமாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நி... மேலும் பார்க்க

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க