செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஏஇபிசி வரவேற்பு

post image

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவிப்பை ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றபோது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்திருந்தது. தொடா்ந்து ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 6 சதவீதமாக உள்ளது.

ரிசா்வ் வங்கியின் கவா்னா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஏப்ரல் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்ற 54-ஆவது நாணய கொள்கைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு ஏற்றுமதியாளா்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும். இது சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

இது தற்போதுள்ள கடன் வாங்குபவா்களுக்கான மாதத் தவணை செலவுகளைக் குறைக்கும் என்பதால், வீட்டுவசதி கடன், வாகன கடன் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன் வசதிகளைப் பெறுவதை எளிதாக்கும்.

இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை மேம்படுத்த உதவுவதுடன், பொருளாதார வளா்ச்சியையும் தூண்டும். எனவே, இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

அதேவேளையில், ஏற்றுமதியாளா்கள் மற்றும் இறுதி நுகா்வோருக்கு இந்த வட்டி விகிதக் குறைப்பின் நன்மைகளை அனைத்து வணிக வங்கிகளும் வழங்குவதை ரிசா்வ் வங்கி உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க