செய்திகள் :

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

post image

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.

இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்தார்.

தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உள்ள நிலையில் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

மேலும், 2025-26 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்றும் பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டில் நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7%, 7%, 6.5%, 6.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்பிஐ கூறியுள்ளது.

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்... மேலும் பார்க்க

வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில்

தில்லி மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தன... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக... மேலும் பார்க்க